Sunday, February 6, 2011

இது ஒரு உண்மைச்சம்பவம் - என் அப்பாவின் நண்பர்கள்

இந்த உண்மைச்சம்பவம் ஆறு வருடங்களுங்கு முன்பு நடந்தது. இந்த துன்பம் என்னுடைய மனதில் ஒரு பாரமாகஇருந்தது. இதை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டால்  எனக்கு மனதில் ஒரு அமைதி கிடைக்கும். என்னுடைய தந்தை மருத்துவமனையில்   சிகிச்சை பெரும் போது நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டேன். ஆனால் அந்த இன்பத்தை தந்தையிடம் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. அந்நாளில் அவர் மரணம் அடைந்தார். இந்த நிலையில் ,எந்தஉறவினரும் அவரை அடக்கம் செய்ய கூட உதவவில்லை. இந்த நிகழ்வு அவருடைய எந்த நண்பர்க்கும் என் தாய் தெரியபடுத்தவில்லை.

ஒரு வழியாக எல்லா துன்பத்தையும் தாங்கிக்கொண்டு   நானும் என் தாயும் எல்லா காரியத்தயும் முடித்த பிறகு, என்னுடைய தந்தையின் உடன் பிறந்தவர்கள் பல பிரச்சினைகளை உருவாக்கினர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருந்த போது  , என் தந்தை வாழ்ந்த வீட்டை விட்டு வழி தெரியாமல் , என் தாய்பிறந்த வீட்டிக்கு சென்றோம். அங்கேயும் பல பிரச்சனைகள். அதன் பிறகு நாங்கள் தனியே வந்து , எங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கினோம். அப்போது, தந்தையின் நண்பர் எங்களுக்கு உதவிகள் செய்தார். அப்போது வாழ்கை என்பது என்னவென்று தெரியாத நிலையில் இருந்தபோது  எனது தந்தையின் நண்பர் எனக்கு சில அறிவுரைகளை கூறினார். அவர் என்னை நன்றாக படிக்கச் சொன்னார். அவரின் குடும்பமும் உதவிகள் செய்தனர். அப்போது தான் எனக்கு நட்பின் அருமை புரிந்தது. என் அப்பா நண்பர்களுடன் சுற்றும் போது எனக்கும் , என் தாய்க்கும்
சிறிதும் பிடிக்கவில்லை. எப்போதும் நண்பர்கள் புராணமே பாடுவார். 

நாங்கள் வெறுத்த என் அப்பாவின் நண்பர்கள் தான் எங்களுக்கு உதவிகள் செய்தனர். நட்பு என்பது வாழ்வில் முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன்

7 comments:

அன்புடன் அருணா said...

வாழ்க்கை நமக்கு தினமும் இப்படிக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கும் ரேகா!

ரேகா said...

ஆமாம் அருணா .. இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்......

abdul said...

enakum apdi thanga....innum athigam ninga elutha all t best....

ரேகா said...

thanks for your wishes

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.
எண்ணங்கள் 13189034291840215795 said...

இந்த துன்பம் என்னுடைய மனதில் ஒரு பாரமாகஇருந்தது. இதை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டால் எனக்கு மனதில் ஒரு அமைதி கிடைக்கும்.//

எழுத்து நல்ல மருந்து

VELU.G said...

சில நட்புகள் உண்மையாக அமைந்து விடுவதற்கு நல்ல சான்று

தங்களுக்கு மன அமைதி கிடைக்க என் பிரார்த்தனைகள்

Post a Comment