Sunday, February 6, 2011

இல்லற வாழ்க்கை

எனக்கு ஒரு நல்ல கணவன் அமையுமாறு கடவுளை கேட்டேன். அது போலவே எனக்கு நல்ல குணம் உடைய கணவன் அமைந்தார்.
எங்கள் திருமணம் ஒரு காதல் திருமணம். 

அதன் பிறகு என் வாழ்க்கை மும்பை மாநகரத்தில் தொடங்கியது. என்னுடைய அம்மா ( மாமியார்) , அப்பா ( மாமனார்) , என் ( கணவரின் ) சகோதர்கள் , சகோதரி , என் மீது மிகவும் அன்பும் , பாசமும் செலுத்துபவர்களாக கிடைத்தார்கள். அது மட்டுமில்லால்  என் கணவரின் இல்லம் இன்னொரு தாய் வீடாக அமைந்தது. என்னிடம் எந்த வரதட்சனையும் எதிர்ப்பார்க்காமல் என் கணவர் என்னை திருமணம் செய்து கொண்டார். என் மீது மிகவும் அன்பு செலுத்துபவர். எனக்கு தந்தை இல்லாத குறையை தீர்த்து வைத்தார். 

மும்பை நகர வாழ்க்கை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. என் செல்லம் மிகவும் சுட்டி. எந்த கவலை இருந்தாலும் அவள் முகத்தை பார்த்தால் ஒரு நொடியில் கவலை மறந்து விடும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் என் கணவருக்காக, நான் பொறுத்துக்கொள்வேன். குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது. ஒருவருடைய தனித்தன்மையை ரசிப்பது.  துன்பங்கள் வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம்

2 comments:

அருள்மொழிவர்மன் said...

rekha'ma nice to see your blog...keep writing....

All the best..

ரேகா said...

Thanks Anna U r the Inspiration

Post a Comment